18 ஆண்டுகள்; 7,80,000 கூடுகள்; குருவி இனங்களுக்கு வீட்டை உருவாக்கிய ‘இந்தியாவின் நெஸ்ட்மேன்’
விரைவான நகரமயமாக்கல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு மத்தியிலும் உங்கள் உயரமான அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னலுக்கு வெளியே சிட்டுக்குருவிகளின் சப்தம் யதார்த்தமாக கேட்கிறதா?
அதற்கு, இவரும் ஒரு காரணம். ஆம், அழிந்துவரும் சிட்டுக்குருவி இனத்தை நகர்ப்புற பகுதிகளுக்கு மீண்டும் வரவைப்பதன் மூலம், மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான இழந்த நல்லிணக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளை ஒரு மனிதன் முன்னெடுத்து வருகிறார்.
‘இந்தியாவின் நெஸ்ட்மேன்’ (NESTMAN OF INDIA) என்று அன்பாக அழைக்கப்படும் ராகேஷ் காத்ரி, கடந்த 18 ஆண்டுகளாக பறவைகளுக்கான வீடுகளை உருவாக்குவதில் அவரது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். இதுவரை, கையால் செய்யப்பட்ட 7,80,000 க்கும் மேற்பட்ட கூடுகளை இந்தியா முழுவதும் அமைத்துள்ளார்.
பழைய டெல்லியின் சிறிய குறுக்குசந்துகளில் வளர்ந்த ராகேஷ், சிறு வயதிலேயே பறவைகளுடன் ஆழமானத் தொடர்பை கொண்டிருந்தார். அவரது வீட்டின் கூரைகளிலிருந்த கூடுகள் தான், பறவைகளுடனான அவரது பந்தத்திற்கான முதல் புள்ளி.
“எனக்கு 14 வயதாக இருந்தபோது என் தந்தையை இழந்தேன். அவரது மறைவினால், பள்ளி முடிந்ததும் ஒரு வாசனை திரவிய தொழிற்சாலையில் வேலை செய்ய ஆரம்பித்தேன். வீடு திரும்பியதும் பறவைகள் சோர்வில்லாமல் கூடுகளை கட்டுவதைப் பார்ப்பேன். சில நேரங்களில் அந்தப் பறவைகளைப் பிடித்து, அவற்றிற்கு வண்ணம் தீட்டி மீண்டும் பறக்கவிட்டுவிடுவேன். அதற்காக நான் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நான் தண்டிக்கப்படவில்லை. மாறாக, இந்தப் பறவைகளுக்கான கூடுகளை உருவாக்குவது வாழ்நாள் முழுவதுக்குமான ஒரு பணியாக மாறியது,” என்று அவர் சோஷியல்ஸ்டோரியிடம் பகிர்ந்தார்.
நகரின் பழைய கட்டிடக்கலையின் மூலை முடுக்குகளில் சிற்றின பறவைகள் அவைகளுக்கான சரணாலயத்தைக் கண்டன. ஆனால், நவீன கட்டிடங்கள் பழைய கட்டமைப்புகளை மாற்றியமைத்ததால், அவற்றின் இயற்கை வாழ்விடங்கள் மறைந்துவிட்டன. இதை உணர்ந்த ராகேஷ், 2007ம் ஆண்டு, தேங்காய் மட்டைகளால் அவரது முதல் கூட்டை அமைத்தார். ஆனால், அது எந்தப் பறவையையும் ஈர்க்க தவறிவிட்டது. ஆனால், அவர் துவண்டுபோகவில்லை.
2008ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், அவரது நுட்பத்தை மேம்படுத்தி மீண்டும் முயற்சித்தார். இந்த முறை மூங்கில் குச்சிகளைக் கொண்டு புதிய கூட்டை வடிவமைத்து, அதை மயூர் விஹாரில் அவர் வசித்த பகுதியில் வைத்தார்.
“‘ஒரு பறவை எதுக்காக உங்கள் கூட்டிற்கு வரணும், அதுவே சொந்தமாக கூடு கட்டிக் கொள்ள முடியும்’ என்று மக்கள் கூறினார்கள். நான்காவது நாளின் இறுதியில், பிப்ரவரி 14, 2008 அன்று, ஒரு ஆண் குருவியும் அதன் துணையும் கூட்டை அதற்கான இடமாக ஏற்றுக்கொண்டது,” என்று அவர் நினைவு கூர்ந்தார்.
அப்பகுதியானது தானியச் சந்தைக்கு அருகில் அமைந்திருந்தது என்பதால், இயல்பாகவே நிறைய பறவைகளை ஈர்த்தது. அடுத்த மூன்றே நாட்களில், 20 கூடுகளை பறவைகள் அவற்றிற்கான வீடுகளாக ஏற்றுக்கொண்டன.
“நீங்கள் பறவைகளைக் கருத்தில் கொள்ளாமல் வீடுகளைக் கட்டியுள்ளீர்கள், அவை எங்கே போகும்?”
ராகேஷின் முன்முயற்சி ஆரம்பத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரது தலையீடு இயற்கைக்கு மாறானது என்று மக்கள் வாதிட்டனர். அதற்கு, அவர் அவர்களை, “நீங்கள் பறவைகளைக் கருத்தில் கொள்ளாமல் வீடுகளைக் கட்டியுள்ளீர்கள். அவை எங்கே போகும்?” என்று எதிர்த்து கேள்வி எழுப்பனார்.
அவரது முயற்சியின் மீது சந்தேகம் இருந்தபோதிலும், அவரது பணி ஈர்க்கப்பட்டது. பள்ளிகள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்களில் வொர்க்ஷாப்களை நடத்த அவரை அழைக்கத் தொடங்கின. மேலும், அவரது இயக்கம் பரவியது. அவர் இந்தியா முழுவதும் 7,000 பள்ளிகளுடன் கூட்டு சேர்ந்து, மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்திய ‘எக்கோ ரூட்ஸ் அறக்கட்டளை’ (Eco Roots Foundation)-யையும் தொடங்கினார்.
ஐந்து மூங்கில் குச்சிகள், கயிறு மற்றும் ஒரு துணியைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட அவரது கூடு, பறவைகளின் இயற்கையான வாழ்விடங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இருந்தது. கூடுகளின் நுழைவாயில் வேட்டையாடுபவர்களைத் தடுக்கும் அளவுக்கு சிறியது, ஆனால் சிட்டுக்குருவிகள், புல்புல்ஸ், மாக்பீஸ், சில்வர்பில்ஸ் மற்றும் ராபின்கள் ஆகிய பறவைகள் உள்நுழையும் அளவுக்கு பெரியது. அத்துடன், டெட்ரா பேக்குகள், சணல் அல்லது மரக் கழிவுகளைப் பயன்படுத்தி அவர் ஈகோ ஃப்ரெண்ட்லி கூடுகளையும் உருவாக்கியுள்ளார். இந்த கூடுகள் சிறிய பறவைகளுக்கு பாதுகாப்பான புகலிடங்களை வழங்குகின்றன.
“நாங்கள் பள்ளிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த செல்லும்போது, முதலிடம் பிடித்தவர்களின் பெயர்களில் கூடுகளை அமைத்து, குழந்தைகளை அதன் உரிமையாக்கிக் கொள்ள ஊக்குவிக்கிறோம். அதனை 10-12 அடி உயரத்தில், ஒரு வெற்று சுவரில் மூலைகளில் வைக்க வேண்டும் என்று அவர்களிடம் வலியுறுத்துகிறோம். நிச்சயம் மரங்களில் கூடுகளை வைக்கக் கூடாது. ஏனெனில், அணில்கள் அதை அழித்துவிடும். கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றும் போது, அவர்களே ஒரு சில கூடுகளை கவனித்துக்கொள்கிறார்கள் அல்லது அவற்றை எங்கள் பராமரிப்பில் விட்டுவிடுகிறார்கள்,” என்றார்.
நகர்ப்புறங்களில் பசுமை குறைந்து வருவதால், ராகேஷின் பணி இப்போது தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களைத் தாண்டி நகர்ப்புற திட்டமிடுபவர்கள் வரை விரிவடைந்துள்ளது. புதிய கட்டுமானங்களில் பறவைகளுக்கு உகந்த இடங்களை ஒருங்கிணைக்க அவர் கட்டுமான நிறுவனங்களுடன் ஒத்துழைக்க விரும்புகிறார்.
“பரேலியைச் சேர்ந்த ஒரு கட்டிடக் கலைஞர் 140 வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் டெட்ராபேக் கூடுகளை நிறுவினார். மேலும் மும்பை, நொய்டா மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த பெரிய டெவலப்பர்கள் குடியிருப்புப் பகுதிகளில் பறவை சரணாலயங்களை உருவாக்கி கூடுகளை வைக்க முயன்றுள்ளனர்,” என்று அவர் பகிர்ந்து கொள்கிறார்.
நாடு முழுவதும் ராகேஷின் முயற்சியால் வைக்கப்பட்டுள்ள கூடுகளில், 80% பறவைகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. நிலையான கூடு கட்டும் முயற்சிகளின் மூலம் பறவைகள் பாதுகாப்புக்கு அவர் அளித்த முன்னோடி பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, சோனி பிபிசி எர்த், ராகேஷை இந்த மாதத்திற்கான ‘எர்த் சாம்பியன்’ ஆக தேர்ந்தெடுத்துள்ளது.
“சோனி பிபிசி எர்த்தில் பறவைகள் கூடு பற்றிய படம் வெளியான பிறகு, கல்வி நிறுவனங்களில் பட்டறைகளை ஏற்பாடு செய்ய 200க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் மற்றும் 300 அழைப்புகள் வந்தன. இது ஒரு சங்கிலியை உருவாக்கும் என்று நம்புகிறோம், இது மக்களை சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்கேற்க ஊக்குவிக்கும்,” என்றார்.
பள்ளிப் பட்டறைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் அதே வேளையில், CSR முயற்சிகளின் கீழ் பெருநிறுவன ஈடுபாடுகளை அவர் நடத்துகிறார். அவரது 16 பேர் கொண்ட குழுவில் தன்னார்வலர்கள் மற்றும் வறிய பெண்கள் உள்ளனர், அவர்கள் ஒவ்வொரு நாளும் 100 கூடுகளை உருவாக்கி அவர்களது வாழ்வாதாரத்தையும் தேடிக்கொள்கின்றனர். கரிம வண்ணங்களில் அவர்களின் கையால் வரையப்பட்ட கூடுகள், பிறந்தநாளுக்கான பரிசுப்பொருளாக பிரபலமாகி வெற்றியை கண்டுள்ளன.
“சுற்றுச்சூழல் பாதுகாப்பின் திறவுகோல் குழந்தைகளின் வசமிருக்கிறது. வசந்த காலம் தொடங்கும் போது, குழந்தைகளிடம் கூரைகளில் மரக்கிளைகள், பழைய சரம் அல்லது பருத்தியை வைக்கச் சொல்கிறேன். ஒரு பறவை கூடு கட்ட 16 நாட்கள் வரை ஆகலாம். அல்லது, நாம் உருவாக்கும் கூட்டை அவைகள் பயன்படுத்தலாம். பறவைகளுக்கு தண்ணீர் மற்றும் தானியங்களை வைக்கச் சொல்கிறேன்,” என்று மகிழ்வுடன் தெரிவித்தார்.
ராகேஷின் அயராத மற்றும் அற்புதமான பணி, லிம்கா சாதனை புத்தகத்தில் ஒரு இடத்திற்கும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்த முயற்சிகளுக்கான தேசிய விருதைப் பெறுவதற்கும் வழிவகுத்தது. சில நேரங்களில் ஒரு நாளைக்கு 200 கூடுகளை உருவாக்கும் “நெஸ்ட்மேன்” அவரது பணியில் அயராது உழைக்கிறார்.
“குழந்தைகள் அவர்கள் அமைத்த கூடுகளில் பறவைகள் குடியேறிவிட்டன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து, அவற்றின் புகைப்படங்களை அனுப்பும் போதெல்லாம், இன்னும் கடினமாக உழைப்பதற்கான தூண்டுதலை பெறுகிறேன்,” என்று கூறி முடி
Content50 gratissnurr Second Strike vid registrering utan insättning: ❔ Varför har licenssystemet införts?⃣ Registrera dig…
ContentKasino Licens online: ⃣ Finns det nackdelar med att testa på en omsättningsfritt casino?Erbjudanden och…
ContentCruise kasino: Vad är det innan fördelar med casinobonusar?Casinobonusar med snabb registreringBäst casinobonus innan Direkt-Casino#3…
ContentAdventures in Wonderland $1 insättning: Hur list jag vinna i närheten av jag spelar med…
ContentGladiator Jackpot gratissnurr 150: Topplista: Bästa bingo bonusar 2025Testa alltid ansvarsfulltAktuella nyheter och erbjudandenOmsättningsfria bonusar…
ContentEagles Wings gratissnurr: OVERVIEW OF testa-bingo.netDrift ditt uttag så härSvensk bingo online – Sveriges bästa…